என் வாழ்வு !
காலம் என்ற சுளியில் சிக்கிய,
தும்பி போல் என் வாழ்வு தத்தளிக்குன்றது,
கடலின் அலைகளுக்கு வந்து சேர
கரையுண்டு – ஆனால்
என் கனவுகள் கரை சேர
தடங்களே இல்லை,
அன்று இலட்சியப் பறவையாகி அன்று,
இறகு உடைந்த பறவையானேன் இன்று,
நோவது விதியையா இல்லை காலம்
செய்த சதியையா?
ஆதரவும் இல்லை,
தோள் சாய தோழமையும் தெலை துர நிலவாக நிற்க்கின்றது,
பசமும் இல்லை, என் பந்தம் என்னும் கோட்பாட்டில்,
ஆயிரம் உறவிருந்தும் அநாதை இவள் பாட்டில்,
தாய் தந்தை இருந்தும் ஓர் அன்பிளந்த ஏழை குயில்,
சேலை தேடி பறக்கின்றது நாளையை ஏதிர்பார்த்து.
No comments:
Post a Comment