Wednesday, December 3, 2008

வள்ளுவரே உன் குறள்கள் இரு வரிகளில்,
ஓரு பொருள் தந்தாலும் காரிருள் இன்றும்
பூமியை கௌவ்விக் கொண்டுதான் உள்ளது,
பரதியே, நா எட்டு வயதினிலே நீ பல பாட்டு
எழுதியிருந்தாலும், பாதகப் பார் போல் ஆகிவிட்டதடா பாரதியே
தமிழுக்கு பணி செய்து வழ்வதே உன் வழ்வு ஏன்றாய் – ஆனால்
தமிழே இன்று தலைகீழாய் நின்று தாண்டவம் ஆடுகின்றது
ஆறுமுகநாவலரே!!!!!!!!!
கண்ணில் கனவுகள் காட்சி அழித்தாலும்,
கனவுகள் நியமும் இல்லை
ஆன்மாவுக்குள் ஆசைகள் தோன்றினாலும் – அது
கை கூடுவது இல்லை
உள்ளத்தின் உணரவுகள் எல்லாம்,
உதட்டில் வருவதும் இல்லை.....................

தமிழன்

தமிழன் என்று தலை நிமிர்ந்து
நிற்க நிலமும் இல்லை – அனாலும்
உதிரம் சிந்தி உரிமையை கேட்கின்றான்
கடலில் கப்பல் ஓட்டிய தமிழன்,
வாழ்வு யுத்தம் எனும்
கடலில் மூழ்கிவிடுமே?
மூழ்கினாலும்,
சுளி ஓடி வந்திடுவன்,
ஏதிரியையும் சுட்டு
பொசிக்கிடுவன்,
இதுதான் செந்தமிழ்னின்
செங்குருதி சொல்லும் வரலாறு.

Tuesday, December 2, 2008

பேசாயோ?

என்றாவது ஓரு நாள் ஆண்டவன் வந்து
ஆடவரின் சோகத்தை பார்த்தால்,
அவனே மீண்டும் சிலுவையில் ஆணியை அறைந்து மாண்டுவிடுவான் பெண்னே!
பெண்னே பேசடி ஓரு வார்த்தை,
என் கலைவாணியும் நீதானே, கண்ணின் வலியும் நீயே,
என் இதய விளக்கு ஓளியும் நியே, என் இருண்ட தேசமும் நீயே.........
உன் மௌனம் என் இரவுகளை,
கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கவிருகின்றது கண்ணே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என் வாழ்வு !


காலம் என்ற சுளியில் சிக்கிய,
தும்பி போல் என் வாழ்வு தத்தளிக்குன்றது,
கடலின் அலைகளுக்கு வந்து சேர
கரையுண்டு – ஆனால்
என் கனவுகள் கரை சேர
தடங்களே இல்லை,
அன்று இலட்சியப் பறவையாகி அன்று,
இறகு உடைந்த பறவையானேன் இன்று,
நோவது விதியையா இல்லை காலம்
செய்த சதியையா?
ஆதரவும் இல்லை,
தோள் சாய தோழமையும் தெலை துர நிலவாக நிற்க்கின்றது,
பசமும் இல்லை, என் பந்தம் என்னும் கோட்பாட்டில்,
ஆயிரம் உறவிருந்தும் அநாதை இவள் பாட்டில்,
தாய் தந்தை இருந்தும் ஓர் அன்பிளந்த ஏழை குயில்,
சேலை தேடி பறக்கின்றது
நாளையை ஏதிர்பார்த்து.

பெண்

பெண் என்பவள் பதுமை அல்ல,
இவள் இந்த பாரை ஆளும் பாக்கியவதி,
சோகத்தின் பந்தமாகி,
ஆண்களின் அடிமையாக வாழ்ந்து வருபவள்,
வாழ்வு என்ற வாளை தன்
நெஞ்சில் எற்றி,
சிறை என்ற வீட்டுக்குள் ஓளி ஏற்றும்
கைதி,
கண்ணீர் துளிகள் மண்ணைத் தெட்டு
உப்பு படர,
தன்னோடு சோகத்தை மறைக்கும் மங்கை,
அனல்கன்னி இவள்.

இரண்டுமே

கனவுகள், கவிதைகள்
இரண்டுமே என்
உரிமைகள்
இன்பங்கள், துன்பங்கள்
இரண்டுமே என்
எதிரிகள்
கல்வி, கண்ணீர்
இரண்டுமே என்
உறவுகள்.

என் வாழ்வு

சாதகப்பறவை போல
நானும் வாழ நினைத்தாலும்,
வாழ்வில்
பல சோதனைகளும், வேதனைகளும் என் இறகில்
அமர்ந்து கொண்டன.