பாரதியே
முதல் முதலாக -நான்
விரும்பியது உன் கவியை
துன்பங்கள் வரும்போது - என்
தோழனாய் இருக்கின்றாய்
என் இன்பத்திலும் - நீ
புன்னகையாய் திகழ்கின்றாய்
என் வெற்றியில் - உன்
மீசையை முறுக்குகின்றாய்
தோல்வியில் உன் கவிதாயால்
தந்தை ஆக்கின்றாய்
என் வாழ்க்கைப் படியை கடக்கும்
போது சிறுபிள்ளையின்
கைபிடித்து படியில் ஏற்றும்
தாய்போல் ஏற்றிவிடுகின்றாய்
உறவுகள் பல ஆனாய் கவியே
என் வாழ்க்கை பாலத்தில் – என்றும்
அக்கினி குஞ்சாய் நான்
திகழ்வேன் உன் காட்டில்