Tuesday, June 30, 2009

பூவாக இருந்த என் மனம்

சருகாக மாறிவிட்ட - காலம்தனை

சிந்திக்கும் போது - மிண்டும்

என் மனம் பூவாக மாறாத - என

ஒரு உள்ளம் ஏங்குகின்றது

பூவாக மாறி பின்பும் சருகாகிவிட்டால் - உன்

உயிர் உடலில் இருக்காது

நான் பூவக மாறட்டா - இல்லை

சருகாகவே இருக்கட்டா ?????????

மானிடப் பிறவி என்பது

வரப்பிரசாதம்

வரமே இன்று வாரம்

கொடுத்தவனை அழிக்கத் துடிக்கின்றது

வாரம் கொடுத்த - இறைவன்

என்ன செய்ய போகின்றனோ ? ( தலையை பிய்த்துக் கொண்டு ஓடுவான் )

நிறைமணி / சுமைமணி

நாணத்துடன் நீ

பூமியை நோக்கி

தலை சாய்கின்றாயா? - இல்லை

உன் மீது திணித்துள்ள

பரத்தை தங்கமுடியாது

பூமி மிது பரத்தை

திணிக்கின்றாயா ?

இறப்பு

வாழ்வின் பயணங்கள்
முடியும்
இறுதி அத்தியாயம்

கண்ணீருடன் எழுதும்

கவிதையே

கண்ணீருடன் கரைந்து

போகதே !!!!!!!!!!!!!!!!!!!!!!!

பலமுறை பூமியில் பூகம்பம்
வெடிக்கின்றது -பூமி தங்குகின்றது

ஒருமுறை மனதுக்குள்
பூகம்பம் வெடித்தாலே
மனம் தங்குதில்லேயே
??????????????????????
நீ என்னை
காதலிக்கும் போது
என்னிடம் காதலில்லை
நான் உன்னை காதலிக்கும் போது
உன்னிடம் காதலில்லை

சொல்லாத வார்த்தைகள்

மெளனம்

மௌனமாக சொல்லும் வார்த்தைகள்

எது?

தொடருமா?

உறவுகளும் தொடருமா ?
நட்புகளும் தொடருமா ?
இன்பங்களும் தொடருமா ?
துன்பங்களும் தொடருமா ?
பாசமும் தொடருமா ?
பகையும் தொடருமா ?
இந்த வாழ்க்கையும் தொடருமா ?
இதை கடந்து சென்றாலும் தொடருமா ?
பார்வையின் ஆழம் கண்ணுக்குத்
தெரியும்
துன்பத்தின் ஆழம் புன்னகையில்
தெரியும்
கவிதையின் ஆழம் கவிஞனுக்கு
தெரியும்
தோல்வியின் ஆழம் வெற்றியில்
தெரியும்
அன்பின் ஆழம் பிரிவில்
தெரியும்
கடலின் ஆழம் அலைக்குத்
தெரியும்
இருளின் ஆழம் விடியலுக்குத்
தெரியும்
கண்ணீரின் ஆழம் புன்னகையில்
தெரியும்
வாழ்வின் ஆழம் சாவில்
தெரியும்
பாரதியே
முதல் முதலாக -நான்
விரும்பியது உன் கவியை
துன்பங்கள் வரும்போது - என்
தோழனாய் இருக்கின்றாய்
என் இன்பத்திலும் - நீ
புன்னகையாய் திகழ்கின்றாய்
என் வெற்றியில் - உன்
மீசையை முறுக்குகின்றாய்
தோல்வியில் உன் கவிதாயால்
தந்தை ஆக்கின்றாய்
என் வாழ்க்கைப் படியை கடக்கும்
போது சிறுபிள்ளையின்
கைபிடித்து படியில் ஏற்றும்
தாய்போல் ஏற்றிவிடுகின்றாய்
உறவுகள் பல ஆனாய் கவியே
என் வாழ்க்கை பாலத்தில் – என்றும்
அக்கினி குஞ்சாய் நான்
திகழ்வேன் உன் காட்டில்

Monday, June 29, 2009

அன்பு செய்த குற்றம் தான் பிரிவு எனும் தண்டனை
என் கண்ணீர்களை களவாடும் கண்ணியடி – நீ
என் மனதுக்குள் நடனமாடும் மங்கையடி
எனை மாற்றி ஏனே மறைந்தாயே – பெண்ணே
உன் மௌன மொழிகள் என் ஆவியை உருக்குதடி
நீ என் தேவதை என பூயித்தேனே – ஏதோ
தெருவில் பார்த்தவனை போல்
பார்வையால் அனல் வீசி சென்றாயே
பிரிவை செல்லாமல் சென்னாயே கண்ணே – கண்ணீரை என்
கண்களில் இறைத்துவிட்டு.
கண்ணில் கனவுகள் காட்சி அழித்தாலும்
கனவுகள் நியமும் இல்லை
ஆன்மாவுக்குள் ஆசைகள் தோன்றினாலும் – அது
கை கூடுவதும் இல்லை
உள்ளத்தில் உணர்வுகள் உதிர்த்தாலும்- எல்லாம்
உதட்டில் வருவது இல்லை
அர்த்தம் இல்லாத வார்தை
என் மௌனம்
சொல்லாத வார்த்தை
என் கவிதை
சொல்லியும் புரியாத வார்த்தை
என் கனவு
நீரில் தெரியாத வார்த்தை
என் கண்ணீர்