கவிதாஞ்சலிJJ
In this blog I have published most of the Tamil poems I wrote.
Friday, September 4, 2009
Thursday, July 9, 2009
சதுரங்க அட்டமடா தமிழனின் வாழ்வு,
தீயுக்கும் ஏறிவுகணைக்கும்
இரையாகும் உடல்கள் நம் இனம்
வழிதிறவா சர்வதேசம் - இன்று
விழி திறக்கா விதிநமக்கு
எங்கு சொல்வது எங்கு செல்வது - நம்
நீதியை எம் உறவு அழிக்கபடும் சதியை
துங்கினால் மறுபடியும் விழிக்கலாமே என்று
வாழும்வாழ்க்கையடா
வான்படை வரி இறைத்த செல்மலையில்
இரத்த அரு ஓடியதும் நம் ஊரில்தானே
பென்பூமி ,மண்பூமி, எம்பூமி என்றேமே
ஒருகணம் அப்பூமியில் நிம்மதியாய்
இருக்க இயலாத பாவியாய் - நானும்
இன்று ஆனேன் ஏனோ ?
கால்பதிக்கும் இடம் எல்லாம் - என் கால்களை
இழப்பேனே மிதிவெடிக்கண்னிகளுக்கு
பயந்து பயந்து வைக்கின்றேன் என் அடியை
தமிழனை பிறந்து திண்டாடும்- என்
வாழ்கையை சொல்ல என்ன
பாவம் செய்தேனோ நான் ????????????????
Thursday, July 2, 2009

நலமா என்று கேட்க இன்று
என்னால் முடியவில்லை
சுழல் காற்றில் சிக்கிய தும்பி - போல்
நம்மவர் வாழ்வின்று- ஏனோ
வீடு இருந்தும் கூட்டுக்குள்
சிக்குண்ட வாழ்வு
வனமும் இறைத்திருக்குமோ
எம் உறவு இலங்கையில்
விட்ட கண்ணிரைப் போல்
ஆறு இல்லா ஊரில் - செங்குருதி
ஆறு பாயந்தும் அன்றோ
ஊருக் ஒரு சுடுகாடு - இன்று
ஊரே சுடுகாடு மாயம்
பச்சைப்பசேல் என்றிருந்த - என் தேசம்
எலும்பு கூடுகளால் நிறைந்ததை நீ அறிவாயோ ?
சொல்வதா எழுதுவதா எம்மவரின்
அடிமை சாசனத்தை
இழந்தது உயிர்கள் பெற்றது அழியா காயங்களை
நாளை என்ற வேளை புதிராகவே உள்ளது
சுகந்திர காற்றுக்காக போராடினோம் - ஆனால்
பெற்றது பிணவாடை விசும் காற்று
உரிமை குரல் கேட்டு ஊமையாக
முள்ளுகம்பி முகாம்களுக்குள் - ஊடமான
இனமும் நாம்தானே
எங்கும் பார்த்திரா- பரம கொடுமை
கொண்டது ஈழத்தமிழினம்
யாவரும் நலமா என்று கேட்க்க - இன்றும்
என்னால் முடியவில்லை
அங்கு பல யாவரும் இல்லை
இப்போது நன்கேட்க்க
சிலர் உள்ளார் சிறைகொண்டு - தன்
தேசத்துக்குள்ளே உயிர்வலையில்
நாளை விடியல் இல்லை - ஆனால்
தமிழுக்கு இரவும் இல்லை
நிலை மாறி அஸ்தமத்தில் உதிக்குமோ - சூரியன்
யாவரின் நலத்திற்க்காய்?
Tuesday, June 30, 2009
நிறைமணி / சுமைமணி
நாணத்துடன் நீ
பூமியை நோக்கி
தலை சாய்கின்றாயா? - இல்லை
உன் மீது திணித்துள்ள
பரத்தை தங்கமுடியாது
பூமி மிது பரத்தை
திணிக்கின்றாயா ?