
நலமா என்று கேட்க இன்று
என்னால் முடியவில்லை
சுழல் காற்றில் சிக்கிய தும்பி - போல்
நம்மவர் வாழ்வின்று- ஏனோ
வீடு இருந்தும் கூட்டுக்குள்
சிக்குண்ட வாழ்வு
வனமும் இறைத்திருக்குமோ
எம் உறவு இலங்கையில்
விட்ட கண்ணிரைப் போல்
ஆறு இல்லா ஊரில் - செங்குருதி
ஆறு பாயந்தும் அன்றோ
ஊருக் ஒரு சுடுகாடு - இன்று
ஊரே சுடுகாடு மாயம்
பச்சைப்பசேல் என்றிருந்த - என் தேசம்
எலும்பு கூடுகளால் நிறைந்ததை நீ அறிவாயோ ?
சொல்வதா எழுதுவதா எம்மவரின்
அடிமை சாசனத்தை
இழந்தது உயிர்கள் பெற்றது அழியா காயங்களை
நாளை என்ற வேளை புதிராகவே உள்ளது
சுகந்திர காற்றுக்காக போராடினோம் - ஆனால்
பெற்றது பிணவாடை விசும் காற்று
உரிமை குரல் கேட்டு ஊமையாக
முள்ளுகம்பி முகாம்களுக்குள் - ஊடமான
இனமும் நாம்தானே
எங்கும் பார்த்திரா- பரம கொடுமை
கொண்டது ஈழத்தமிழினம்
யாவரும் நலமா என்று கேட்க்க - இன்றும்
என்னால் முடியவில்லை
அங்கு பல யாவரும் இல்லை
இப்போது நன்கேட்க்க
சிலர் உள்ளார் சிறைகொண்டு - தன்
தேசத்துக்குள்ளே உயிர்வலையில்
நாளை விடியல் இல்லை - ஆனால்
தமிழுக்கு இரவும் இல்லை
நிலை மாறி அஸ்தமத்தில் உதிக்குமோ - சூரியன்
யாவரின் நலத்திற்க்காய்?