Thursday, July 2, 2009



நலமா என்று கேட்க இன்று

என்னால் முடியவில்லை

சுழல் காற்றில் சிக்கிய தும்பி - போல்

நம்மவர் வாழ்வின்று- ஏனோ

வீடு இருந்தும் கூட்டுக்குள்

சிக்குண்ட வாழ்வு

வனமும் இறைத்திருக்குமோ

எம் உறவு இலங்கையில்

விட்ட கண்ணிரைப் போல்

ஆறு இல்லா ஊரில் - செங்குருதி

ஆறு பாயந்தும் அன்றோ

ஊருக் ஒரு சுடுகாடு - இன்று

ஊரே சுடுகாடு மாயம்

பச்சைப்பசேல் என்றிருந்த - என் தேசம்

எலும்பு கூடுகளால் நிறைந்ததை நீ அறிவாயோ ?

சொல்வதா எழுதுவதா எம்மவரின்

அடிமை சாசனத்தை

இழந்தது உயிர்கள் பெற்றது அழியா காயங்களை

நாளை என்ற வேளை புதிராகவே உள்ளது

சுகந்திர காற்றுக்காக போராடினோம் - ஆனால்

பெற்றது பிணவாடை விசும் காற்று

உரிமை குரல் கேட்டு ஊமையாக

முள்ளுகம்பி முகாம்களுக்குள் - ஊடமான

இனமும் நாம்தானே

எங்கும் பார்த்திரா- பரம கொடுமை

கொண்டது ஈழத்தமிழினம்

யாவரும் நலமா என்று கேட்க்க - இன்றும்

என்னால் முடியவில்லை

அங்கு பல யாவரும் இல்லை

இப்போது நன்கேட்க்க

சிலர் உள்ளார் சிறைகொண்டு - தன்

தேசத்துக்குள்ளே உயிர்வலையில்

நாளை விடியல் இல்லை - ஆனால்

தமிழுக்கு இரவும் இல்லை

நிலை மாறி அஸ்தமத்தில் உதிக்குமோ - சூரியன்

யாவரின் நலத்திற்க்காய்?