சதுரங்க அட்டமடா தமிழனின் வாழ்வு,
தீயுக்கும் ஏறிவுகணைக்கும்
இரையாகும் உடல்கள் நம் இனம்
வழிதிறவா சர்வதேசம் - இன்று
விழி திறக்கா விதிநமக்கு
எங்கு சொல்வது எங்கு செல்வது - நம்
நீதியை எம் உறவு அழிக்கபடும் சதியை
துங்கினால் மறுபடியும் விழிக்கலாமே என்று
வாழும்வாழ்க்கையடா
வான்படை வரி இறைத்த செல்மலையில்
இரத்த அரு ஓடியதும் நம் ஊரில்தானே
பென்பூமி ,மண்பூமி, எம்பூமி என்றேமே
ஒருகணம் அப்பூமியில் நிம்மதியாய்
இருக்க இயலாத பாவியாய் - நானும்
இன்று ஆனேன் ஏனோ ?
கால்பதிக்கும் இடம் எல்லாம் - என் கால்களை
இழப்பேனே மிதிவெடிக்கண்னிகளுக்கு
பயந்து பயந்து வைக்கின்றேன் என் அடியை
தமிழனை பிறந்து திண்டாடும்- என்
வாழ்கையை சொல்ல என்ன
பாவம் செய்தேனோ நான் ????????????????
Thursday, July 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment